கரூர் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் அக். 13ல் நடைபெறுகிறது

கரூர், அக். 11: கரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி தாலுகா வாரியாக நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் சம்பந்தமான குறைபாடுகள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் உணவுப்ெபாருள் வழங்கல் தொடர்பான பொதுமக்களின் குறைகளை களைவதற்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. கரூர் தாலுகாவில் சணப்பிரட்டி கிராம நிர்வாக அலுவலகம், அரவக்குறிச்சி தாலுகாவில் கார்வழி ஊராட்சி மன்ற அலுவலகம், குளித்தலை தாலுகாவில் மருதூர் வடக்கு 2 கிராம நிர்வாக அலுவலகத்திலும்,

கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வயலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கடவூர் தாலுகாவில் தொண்டமாங்கினம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், மண்மங்கலம் தாலுகாவில் வாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்துகொள்ளலாம் எனவும், தற்போது பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதால் இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் பெறாத அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: