கோவை, அக்.5: கோவை பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனையில் விலை கிலோவிற்கு ரூ.31 குறைந்துள்ளது. கோவை பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனைக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2,049 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வியாபாரிகள் மற்றும் பட்டுநூல் கூட்டுறவு சங்கத்தினர் கொள்முதல் செய்தனர். நேற்றைய விற்பனையில் பட்டுக்கூடு குறைந்தபட்ச விலை கிலோ ரூ.207 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.380 ஆகவும், சராசரி விலை ரூ.290 ஆகவும் இருந்தது. பட்டுநூல் விலை கிலோ ரூ.2,830 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நிலவிய விலையோடு ஒப்பிடுகையில் பட்டுக்கூடு விலை கிலோவிற்கு ரூ.31 குறைந்துள்ளது.