ரயிலில் இருந்து விழுந்து வாலிபர் சாவு

ஈரோடு, அக்.5:  சேலம் மாவட்டம் மாவிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து போனவரின் சட்டை பாக்கெட்டில் சோதனை செய்தபோது அதில் திருப்பூரில் இருந்து அவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் இறந்து போனவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சோமைஹேம்பரம் (27) எனத் தெரியவந்தது. இவர் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்து போனதாக தெரிகிறது.

சத்தியமங்கலத்தில்

Related Stories: