வனத்துறை சார்பில் தேக்கு, மலைவேம்பு இலவசம்

ஈரோடு, அக். 5: வனத்துறை சார்பில் தேக்கு, மலைவேம்பு நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மழைக்காலங்களில்  பட்டா நிலங்களில் நட வசதியாக வனத்துறை சார்பில் தேக்கு, சந்தனம்,  மலைவேம்பு ஆகிய நாற்றுகள் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு  வருகின்றது. இந்தாண்டு சந்தன மர நாற்றுகள் தயாராக இல்லாததால் தேக்கு,  மலைவேம்பு ஆகிய நாற்றுகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.  சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான சான்றினை சமர்பித்து  அந்தந்த பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 200  நாற்றுகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: