அலட்சியத்தில் அதிகாரிகள் அஞ்சல் வாரவிழாவையொட்டி ஒரே நாளில் 3 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் துவக்கம்

மதுரை, அக். 11: தேசிய அஞ்சல் வாரவிழாவையொட்டி, மதுரை வடக்குவெளி வீதி தலைமை தபால் நிலையத்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 3ஆயிரம் அஞ்சலக சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டன.

    தேசிய அஞ்சல் வாரவிழாவில், நேற்று சேமிப்பு வங்கி தினத்தையொட்டி, தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் வெண்ணம் உபேந்தர் தலைமையில், வடக்குவெளி வீதி தலைமை தபால் நிலையத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஹரிஹர்ஷா, ஆர்.எம்.எஸ் கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர்ராஜ் முன்னிலை வகித்தனர். முதன்மை தலைமை அதிகாரி நாகநாதன் வரவேற்றார். இதில், அக்.10ம் தேதி நேற்று ஒருநாளில் மட்டும் 3ஆயிரம் அஞ்சலக சேமிப்பு கணக்குகள்  துவங்கப்பட்டன. சேமிப்பு கணக்குகள் சேகரிக்கவும், கணக்குகள் துவங்கவும் பெரிதும் ஒத்துழைப்பு அளித்த மதுரை அஞ்சலக உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் நாகசுந்தரம், ஓய்வு உதவி கருவூல அலுவலர் செல்வராஜன் சிறந்த வாடிக்கையாளர்களாக கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு தேசிய அளவில் கிடைக்கப்பெற்ற விருதுகள் மற்றும் கலைப்பொருட்கள் அடங்கிய அஞ்சல் கொலு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories: