இளைஞர் உலக மனநல தின பேரணி

உசிலம்பட்டி, அக். 11: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இளைஞர் உலக மனநல தினப் பேரணி நடைபெற்றது.  பேரணியில் உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை பள்ளித்தலைமை ஆசிரியை அங்கையற்கன்னி முன்னிலையில், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். இந்த பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து துவங்கி, தேனி சாலை வழியாக, பேருந்துநிலையம், ஐந்துகல்ராந்தல் தேவர்சிலை, பேரையூர் சாலை, அரசு மருத்துவமனை வழியாக உசிலம்பட்டியிலுள்ள முக்கிய வீதிகளில் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் மனநலம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கி, கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் செல்வராஜ், பூமிநாதன், ஜெயந்தி சிவசங்கரி உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் அருகே

Related Stories: