அழகர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடக்கம்

அலங்காநல்லூர், அக்.11: அழகர் கோயிலில் நேற்று முதல் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று முதல் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி மூலவர், தேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு விருச்சி பூக்களால் ஆன மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் நடந்தது.அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்காக நவராத்திரி கொழு மண்டபம் வண்ண விளக்குகளாலும், தென்னை ஓலை தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழா 9 நாட்களும் தொடர்ந்து நடைபெறும்.

Related Stories: