மதுரை மாவட்டத்தில் ஓட்டுநர் உரிம கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்

மதுரை, அக். 11: மதுரை மாவட்டத்தில் இனி ஓட்டுநர் உரிம கட்டணத்தை ஆன்ைலனில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வாகன பதிவு கட்டணம், வரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த 2012ல் அறிமுகமானது. தொடர்ந்து பெயர் மற்றும் உரிமம் மாற்றம் செய்தல், தவணை கொள்முதல் மற்றும் தவணை ரத்து உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று, அதற்குரிய கட்டணமும் கணினி வழியாகவே பெறப்படு

கிறது.

ஓட்டுநர் உரிமம், முகவரி மாற்றம், தகவல் பெறுதல் உள்ளிட்ட சேவைக்களுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அக்.1 முதல் நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்கள் பாரிவாகன் என்ற வெப்சைட் மூலம் வங்கி சேவை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய பிறகு அதற்கான ஒப்புைக சீட்டு அல்லது கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று உரிமம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். தொடர்ந்து ஆர்டிஓ அலுவலக பணிகள் அனைத்தும் ஆன்லைன் வசதிக்கு மாற்றப்படும் என மதுரை கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: