அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

 வாடிப்பட்டி, அக். 11: வாடிப்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் ஜவுளி பூங்கா எனுமிடத்தில் மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவ்வழியாக சாலையோரமாக நடந்து சென்ற சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: