லாட்டரி மது விற்ற 3 பேர் கைது

திருப்பூர், அக்.7:  திருப்பூர் வடக்கு போலீசார் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் மற்றும் திருமலை நகர் 2வது வீதி ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், திருப்பூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மணிகண்டன் (47), காந்திநகரை சேர்ந்த சீனிவாசன் (44) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.6,180 பறிமுதல் செய்தனர்.இதேபோல், முத்தனம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த ராஜமாணிக்கம் (39) என்பரை ரூரல் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: