வக்கீல்களுக்கு கருத்தரங்கம்

திருப்பூர், அக்.7: வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் கிளை சார்பில் வக்கீல்களுக்கான கருத்தரங்கம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.  சங்க தலைவர் உதயசூரியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கவுரி வரவேற்று பேசினார். இதில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்து கொண்டு ‘நீதித்துறையின் சுதந்திரம்’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் ‘இளம் வக்கீல்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் ‘பறிபோகும் கருத்துரிமை’ என்ற தலைப்பிலும் பேசினர்.

Related Stories: