பைக் மீது கார் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி

தாராபுரம், அக்.7:  தாராபுரத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ (48) கூலி தொழிலாளி. இவரது மகன் நவீன் (18). இவர், தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் கவின்குமார் (20) என்பவருடன் மோட்டார் பைக்கில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

குப்பிச்சிபாளையம்பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில் நவீன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த கவின்குமார், தாராபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வருகிறார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: