உடுமலை, அக்.7: பத்து வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், உடுமலையில் நேற்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடந்தது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.இதைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் கோயிலை அடைந்தது. அங்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. உண்ணாவிரதம் மற்றும் பேரணியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்த கொண்டனர்.