வீட்டு மின்சாரத்தில் முறைகேடு தந்தை, மகனுக்கு 6 மாதம் சிறை

திருப்பூர், அக்.7:  திருப்பூரில் வீட்டு மின் இணைப்பை வர்த்தகத்துக்கு பயன்படுத்திய தந்தை, மகனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கருணாம்பதியை சேர்ந்தவர் பழனிசாமி (69). இவரது மகன் ஹரி (39). விவசாயிகள். இருவரும் சேர்ந்து வீட்டு மின் இணைப்பை சட்டவிரோதமாக வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தியதாக மின்வாரிய உதவி பொறியாளர் கண்ணன் கடந்த 6.12.2012 அன்று பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுெதாடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பழனிசாமி, ஹரி ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை, தலா ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு கூறினார்.

Related Stories: