ேகாத்தகிரியில் மழையால் சேதமான வீடுகளுக்கு இழப்பீடு

கோத்தகிரி,அக்.7: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாண்டியன் நகர், கெங்கரை, நட்டக்கல், அருள்நகர், மந்தட்டி, அவ்வூர் ஆகிய கிராமங்களில் 7 வீடுகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு செய்து, தாசில்தாருக்கு அறிக்கை சமா்ப்பித்தார். இந்த நிலையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு தலா ரூ.4100ஐ தாசில்தார் ரவிகுமார் வழங்கினார்.

Related Stories: