அந்தியூரில் திமுக கூட்டணி கட்சிகள் இன்று உண்ணாவிரதம்

அந்தியூர், ஆக.7: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கார் ஸ்டாண்ட் அருகில் இன்று திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

 மேட்டூர், பாவானிசாகர் அணைகளின் உபரி நீரை அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் உள்ள ஏரி,குளம், குட்டைகளில் நிரப்பி  குடிநீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனக்கோரி, இந்த போராட்டம் நடக்கிறது.  இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கொமதேக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திராவிடர் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் விடுத்துள்ள அறிக்கையில், உண்ணாவிரத போராட்டம் இன்று நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: