கொடுமுடியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்

கொடுமுடி, அக்.7: கொடுமுடி யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட பேரிடர் மேலாண்மை  ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ, சிவசுப்பிரமணி தலைமையில் நேற்று நடந்தது.  கூட்டத்தில் தீயணைப்புதுறை, உள்ளாட்சிதுறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம்,  மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, உள்ளிட்ட முக்கிய துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பருவ மழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  கூட்டத்தில் மாநில விதை நேர்த்தி குழு உறுப்பினர் கலைமணி, கொடுமுடி கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் சுப்பிரமணி, விஜயலட்சுமி, வீரன், கிட்டுச்சாமி, முன்னாள் கொடுமுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணன், சென்ன சமுத்திரம் பேரூர் செயலாளர் கோபால்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: