அந்தியூர்,ஆக.7: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் மகன் தினேஷ்குமார்(16). இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். கடந்த மாதம் 23ம் தேதி அரசு பள்ளி அருகில் இவர் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் தினேஷ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினேஷ்குமார் இறந்து 15 நாட்கள் ஆனபின்னரும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை காவல்துறை கண்டுபிடிக்காததால், மாணவர்கள் மற்றும் இறந்த மாணவரின் உறவினர்கள் நேற்று அந்தியூர் அருகே உள்ள முருகன்கிணறு என்ற இடத்தில் அந்தியூர்- பவானி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.