ஆற்காடு, அக். 11: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள விஜய துர்க்கையம்மன் கோயிலில் 23ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. விஜய துர்க்கை அம்மனுக்கு தினமும் காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. அதேபோல் வாராஹி அம்மனுக்கு காலை 10 மணிக்கு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.