பெரம்பலூர்,அக்.10: பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் இன்று (10ம்தேதி) திறந்து வைக்கிறார். வழக்கமாக ரயில்வேநிலையம், வங்கிகளில் உள்ளதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி, வழக்கு விஷயமாக நீதிமன்றங்களுக்கு வருகைதரும் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், சாட்சிகளாக வருகிற, ஆதரவு தரப்பினராக வருகிற பொதுமக்கள், தாங்கள் சம்மந்தப்பட்ட, தாங்கள் அறிய வேண்டிய வழக்குகளின் நிலமை, வாய்தா தேதி போன்றவற்றை அன்றன்றைக்கு உடனுக்குடன் தொடுதிரை கணினி வசதியை முழுமையாக பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம்,