அரியலூர்,அக்,10: ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்று நிலம் கொடுத்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அரியலூர் கலெக்டர் அலுவகத்தில் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுடன் கலெக்டர் விஜயலெட்சுமி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்குவதற்காக ஜெங்கொண்டம் சுற்றுப்புர பகுதிகளில் அமைந்து கிராமத்தில் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. அப்போது சுமார் ஒரு ஏக்கர் ரூ.22 ஆயிரத்திற்கு வாங்கப்பட்டதாக கூறப்பபடுகிறது. அதனால் நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் பத்தாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஜெயங்கொண்டத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்
அமைக்கப்பட்டன. இந்நீதிமன்றத்தில் நிலம் கொடுத்த அனைவருக்கும் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.5 லட்சத்தி 40 ஆயிரம் மட்டும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து கலெக்டர் தலைமையில் நிலம் கொடுத்தவர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிலம் கொடுத்தவர்களிடம் உங்கள் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 லட்சத்தி 40 ஆயிரம் மட்டும் தருவதாக கூறினார்.