ஜெயங்கொண்டம்,அக்.10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கினைந்த கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான மருத்துவ முகாம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜா தலைமை வகித்தார். முகாமில் உடல் இயக்க குறைபாடு மருத்துவர் ராஜா, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மணிகன்டன், மனநலமருத்துவர் அன்பழகி, கண் பரிசோதகர் கலைமதி ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர். முகாமில் 210 மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.