தண்டராம்பட்டு, அக்.10: தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் ₹2 கோடியில் கட்டப்பட்ட அரசு பள்ளி தினகரன் செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு வந்தது. தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் கட்டிடங்களை பழுதடைந்து காணப்பட்டதால் 2015-16ம் நிதியாண்டில் ₹2 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் வகுப்பறைகள், ஆய்வகம், அலுவலகம், கணினி அறை, நூலகம், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், கட்டிடப் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.