திருவண்ணாமலை, அக்.10: தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்கிழமை அனைத்து தாலுகாவிலும் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த மாதம் முதல் செவ்வாய்கிழமையான கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தி என்பதால் அன்று கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, 2வது செவ்வாய்கிழமையான நேற்று நடைபெறும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், நேற்றும் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.