வாலாஜாவில் குடிபோதையில் பள்ளி வேன் ஓட்டிய டிரைவருக்கு அடி உதை

வாலாஜா, அக்.10: வாலாஜாவில் குடிபோதையில் பள்ளி வேன் ஓட்டிய டிரைவரை பொதுமக்கள் பிடித்து அடித்தனர். வாலாஜாவில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் டிரைவர் குடிபோதையில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர், வாலாஜா போலீசில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடத்தியதில் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த தருண்(28) என்று தெரியவந்தது. மேலும், அவரை பரிசோதனை செய்ததில் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: