கிணற்றில் மிதந்த தொழிலாளி சடலம் மீட்பு ஆம்பூரில் 2 நாட்களாக தேடப்பட்ட நிலையில்

ஆம்பூர், அக்.10: ஆம்பூர்  பன்னீர்செல்வம் நகர் அடுத்த மலைமேடு பிலால் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சொக்கன்(20), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த 7ம் தேதி மாலை அங்குள்ள கிணற்றில் குளித்தார். அப்போது சொக்கன் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சொக்கனை தேடினர். இரவு நேரமாகிவிட்டதால் நேற்று முன்தினம் 2வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார் ஈடுபட்டனர். மேலும், அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வந்து தேடினர். ஆனால், நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடும் முயற்சியை கைவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை கிணற்றில் சொக்கனின் சடலம் தானாக மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டனர். பின்னர், ஆம்பூர் டவுன் போலீசார் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: