திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

திருப்பூர், அக்.5: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடந்த பிறந்தநாள் விழாவையொட்டி கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குமரன் நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், எம்.பி.சத்யபாமா, எம்எல்ஏ.,க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), நடராஜன் (பல்லடம்), தனியரசு (காங்கயம்),  கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தியாகி திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை சார்பில், குமரன் சிலை அருகில் இருந்து குமரன் ரோடு வரை ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குமரன் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: