காங்கயம், அக்.5: காங்கயத்தில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சீரணி அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமன், காங்கயம் வடக்கு ஒன்றிய செயலார் சிதம்பரம், தெற்கு ஒன்றிய செயலாளர் அப்புக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநில இளைஞர்அணி செயலாளர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எடப்பாடி தலைமையிலான அரசால் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.45 ஆயிரம் கடன் ஏற்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட 191 திட்டங்களில் ஒன்றுகூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.