தூய்மை முகாம்

ஊட்டி,அக்.5: ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி கிராமத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரிமா சங்கம் சார்பில் தூய்மை பாரத விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் 78 முன்னாள் படைவீரர்கள், அதிரகட்டி கிராம பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தூய்மையை கடைபிடிப்பதாக உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. மாநில தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் மல்லிகா பேசினார்.

Related Stories: