ஆம்பூர், அக். 5: ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் மசூதி 2வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(41). கட்டிட மேஸ்திரி. இவரது அண்ணன் தீனதயாளன். இவரது மகள் வரலட்சுமி(32). இவருக்கும் திருத்தணியை சேர்ந்த காணிக்கைராஜ்(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வரலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டாராம். இதனால் காணிக்கைராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி நேற்று காலை பார்த்திபன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பார்த்திபனிடம், தனது மனைவி குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘உனது மனைவி இங்கு வரவில்லை' என்றாராம். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.