சாம்ராஜ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

மஞ்சூர், செப்.26: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள சாம்ராஜில் சிவசைலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ‘நினைவுகளின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளியில் கடந்த 30ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவ, மாணவிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் முன்னாள் ஆசிரியர்கள் ஸ்டாரி, வள்ளியம்மாள் ஆகியோரும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டதுடன் தங்களது சுய விவரங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் 30ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி பருவத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை நினைவு படுத்தி உற்சாகமும் நெகிழ்ச்சியும் அடைந்தார்கள். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கவும் நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடுவதுடன் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி செலவுகளை ஏற்பதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: