கோத்தகிரி,செப்.26: கோத்தகிரி அருகிலுள்ள ஜக்கனாரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். தூய்மை இந்தியா பயிற்றுநர் மல்லிகா முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அங்கிருந்து பேரணி துவங்கி சக்கத்தா அரசு பள்ளி வரை சென்றது. பள்ளி வளாகத்தை சுற்றி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நேரு யுவேகிந்திரா அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.