தொதநாடு சீமை படுகர் சங்க கூட்டம்

ஊட்டி, செப். 26: தொதநாடு சீமை படுகர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராமன் தலைமையில் நடந்தது. நாக்குபெட்டா சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் பெள்ளி வரவேற்றார். கூட்டத்தில் இந்திய தேயிலை வாரிய துணைத் தலைவர் குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். கூட்டத்தில் படுகர் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்தும், தேயிலைக்கு உரிய விலை கிடைக்க மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், பொருளாளர் பெள்ளி, நிர்வாகிகள் முருகன், அர்சுணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: