சசிக்குமார் நினைவுதினம்

திருச்செந்தூர்,  செப். 25: கோவையில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை இந்து முன்னணி  செய்தி தொடர்பாளர் சசிக்குமாரின் 2வது ஆண்டு நினைவுதினம் திருச்செந்தூரில் அனுசரிக்கப்பட்டது.

 இதையொட்டி திருச்செந்தூர் தேரடி திடல் அருகே நடந்த நினைவுதின நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த சசிக்குமார் படத்திற்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றியத் தலைவர்  ஜெயசிங், நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், பொருளாளர் மணி, நகரச் செயலாளர்கள்  வசந்த், கந்தன், செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன், பாஜ செயற்குழு  உறுப்பினர் செந்தில்வேல், நகர துணைத்தலைவர் மாயாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்  தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: