குளத்தூர், செப். 25: வேப்பலோடை அரசு பள்ளியில் தூய்மை பாரத இயக்க கூட்டம்நடந்தது. குளத்தூர் அடுத்த வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்க கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகச் செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், மோகன், சார்லஸ், ராஜபாண்டி, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். ஆசிரியை புளோரிடா வரவேற்றார்.
குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார செவிலியர் இருதயஜோதி பேசினார். ஆசிரியை கிரேஸ்லின் நன்றி கூறினார்.