கோவில்பட்டியில் கடைகளை உடைத்து கொள்ளை

கோவில்பட்டி, செப். 25:  கோவில்பட்டி   ராஜிவ்நகர் 3வது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன் (47). இவர் அதே பகுதியில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்ட கடைகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றார்.    நள்ளிரவில் இக்கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த ஆயில், ப்பு பாக்கெட்டுகள், விலை உயர்ந்த   பட்டுச்சேலைகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.70   ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் டி.எஸ்.பி. ஜெபராஜ், கோவில்ப்ட்டி மேற்கு எஸ்ஐ வசந்தகுமார்   மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்களும் கடைகளில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.  கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: