பேரூரணி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி, செப். 25: பேரூரணியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பரிதவிப்பதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக பேரூரணி கிராமம் மேலத்தெரு மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திம்மராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரணி கிராமத்தில் சமத்துவபுரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வடக்குதெரு, மேலத்தெரு, வாழவந்த அம்மன்கோவில்தெரு, பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. னவே முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: