2 நிமிடங்களில் 6 அம்புகள் எய்து சாதனை

குமாரபாளையம்,செப்.21: சென்னையில்  நடந்த வில்வித்தை போட்டியில், இரண்டு நிமிடங்களில் ஆறு அம்புகளை எய்து,  குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சென்னையில்  பதஞ்சலி யோகா ஆராய்ச்சி மையம், அர்ஜூனன் வில்வித்தை அகாடமி இணைந்து  வில்வித்தை போட்டியை நடத்தினர். இதில் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா  பொறியியல் கல்லூரி மாணவர்கள் ரிஷப் கண்ணா, தீபக் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரே  நேரத்தில் 150 வில் வித்தையாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இரு  மாணவர்களும், இரண்டு நிமிடங்களில் ஆறு அம்புகளை இலக்கை நோக்கி செலுத்தினர்.  இதன் மூலம் முதல் பத்து போட்டியாளர்களில் இம்மாணவர்கள் சிறந்த  போட்டியாளர்களாக தேர்வு பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களின்  பெயர்கள் இந்தியன் புக்ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சாதனை  மாணவர்களை ஜேகேகே நடராஜா கல்வி குழுமங்களின் தலைவர் செந்தாமரை, நிர்வாக  இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

Related Stories: