எருமப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா - எம்எல்ஏ பங்கேற்பு

சேந்தமங்கலம், செப்.21: எருமப்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்திவைக்கப்பட்டது.நாமக்கல்  மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில், வட்டார  சமுதாய வளைகாப்பு விழா, சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமை வகித்து, 5  கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வளைகாப்பு சீர்வரிசை  பொருட்களுடன், தனது சார்பில் நிதிஉதவியும் வழங்கினார்.  வட்டார  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு பிரசவ கால முன் கவனிப்பு, பின் கவனிப்பு  மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், கர்ப்பிணி  பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்தும், வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் முரளிபாபு, மருத்துவம் சாராத மேற்பார்வையாளர்  முருகேசன் ஆகியோர் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை  சேர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: