விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, செப்.21: கிருஷ்ணகிரியில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 28ம் தேதி(வெள்ளி) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் டாக்டர். பிரபாகர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

Related Stories: