மருத்துவமனைக்கு சென்ற பெண் மாயம்

கிருஷ்ணகிரி, செப்.21: காவேரிப்பட்டணம் அருகே சாப்பர்த்தி பில்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மனைவி சுசீலா(45). குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 17ம் இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மறுநாள்(18ம் தேதி) அதிலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுசீலா, பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: