அஞ்சல் உறை ஓவிய போட்டிக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.21: அஞ்சல் உறைக்கு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பாராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சேலம் பெக்ஸ்-2018 என்ற விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவுள்ளது. இதில், இடம்பெறும் ஓவியத்திற்கான தலைப்பு “தமிழகத்தில் காந்தியடிகளும், சுதந்திர போராட்டமும்” ஆகும். தமிழகத்தில் உள்ள எல்லா வயதினரும், இப்போட்டியில் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அனுப்பி வைக்கலாம். வாட்டர் கலர், ஸ்கெட்ச், பெயிண்ட் வகையான ஓவியங்களில் ஏதாவது ஒரு வகையில் ஏ4 அளவுள்ள தாள் அல்லது அட்டையிலோ வரையலாம்.  படத்திற்கு கீழ் அதனை வரைந்தவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் செல்போன் எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். வரைந்த ஓவியத்தை பி.ஆறுமுகம், சேலம் பெக்ஸ் விழாவின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை- 641002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ₹10 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ₹1000 ரூபாயும் வழங்கப்படும்.

Related Stories: