மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் ஏலம் -27ம் தேதி நடக்கிறது

தர்மபுரி, செப்.21: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மதுவிலக்கு போலீசாரிடம் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 சக்கர வாகனம் 1, 34 டூவீலர்கள் என மொத்தம் 35 வாகனங்கள், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு, தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் 4 சக்கர வாகனத்தை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், முன்வைப்பு தொகையாக ₹10 ஆயிரம் பணத்தை ஏலத்திற்கு முன்பே செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை, தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவில் நேரிலோ அல்லது 04342-230759 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: