பொறியாளர்கள் தின விழா கொண்டாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.21: பொம்மிடியில் செயல்பட்டு வரும் நிவாசா பொறியியல் கல்லூரியில், பொறியாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடியில் செயல்பட்டு வரும், நிவாசா பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் கவுரவத்தலைவர் இளங்கோவன், தலைவர் ரேவதி இளங்கோவன், இயக்குநர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜெகதீசன் வரவேற்றார். அறக்கட்டளையின் கவுரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோவன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக, பெங்களூரு எல் டி டெக்னாலஜி சர்வீசஸ் இணை மேலாளர் பிரியதர்ஷினி பெருமாள் கிரியேட்டிவிட்டி மற்றும் இன்னவேஷன் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இயந்திரவியல் துறைத்தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

மூகாம்பிகை பாலிடெக்னிக்கில்

Related Stories: