கடகத்தூர் அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

தர்மபுரி, செப்.21: கடகத்தூர் அரசு ஐடிஐயில் நேற்று நடந்த 3ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 60பேர் கலந்து கொண்டனர்.  

தர்மபுரி அருகே கடகத்தூர் அரசு ஐடிஐயில் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. கலந்தாய்விற்கு முதல்வர் ரவி தலைமை வகித்தார். காலை 8.30 மணிக்கு 8ம் வகுப்பு பொது பிரிவினருக்கும், 9 மணியளவில் 10ம் வகுப்பு பொதுபிரிவினருக்கும் கலந்தாய்வு நடந்தது. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அன்டு புரோக்கிராமிங் அஸிஸ்டெண்ட், கட்டிட வரைவாளர், மின்பணியாளர், பொருத்துனர், கம்மியர் டீசல் இன்ஜின், கடைசலர், பற்றவைப்பர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள 49 இடங்களுக்கு 60பேர் பங்கேற்றனர். கலந்தாய்வில் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: