மாநகராட்சி 4 கோட்டங்களில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, செப்.21: திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை (22ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி ரங்கம் கோட்டம் 6வது வார்டு மேலகொண்டையம்பேட்டை  நேருஜி பள்ளி, அரியமங்கலம் கோட்டம் 27வது வார்டு சங்கிலியாண்டபுரம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, பொன்மலை கோட்டம் 37வது வார்டு செம்பட்டு, குடித்தெரு சத்துணவு மையம், கோ-அபிஷேகபுரம் கோட்டம் 54வது வார்டு புத்தூர், தெற்கு முத்துராஜா தெரு சத்துணவு மையம் ஆகிய இடங்களில் நடக்கிறது.இம்முகாமில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இ.சி.ஜி., பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளும்படி திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: