குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி  உய்யக்கொண்டான் திருமலை சண்முகாநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது  மனைவி விஜயபிரியா(27). இவர் தனது கைக்குழந்தையுடன் அதே பகுதியில் நடந்து  சென்றார். அப்போது பின்னால் மொபட்டில் ஹெல்மெட் அணிந்து வந்த  மர்மநபர்கள், விஜயபிரியாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி செயினை பறித்து  சென்றனர். இது குறித்து விஜயபிரியா கொடுத்த புகாரின் பேரில் அரசு  மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து ஹெல்மெட் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: