தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம்

திருவள்ளூர், செப். 21: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி (தனி), மாதவரம் (பகுதி), மதுரவாயல் (பகுதி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதில், தலைமைக்கழக சிறப்பு பிரதிநிதிகளாக மாணவரணி இணை செயலாளர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வரும் 29ம் தேதி காலை பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி நகரம், பூந்தமல்லி கிழக்கு, மேற்கு, திருவள்ளூர் தெற்கு, வடக்கு, திருமழிசை பேரூர் பகுதி பாக முகவர்களுக்கு, நாசரத்பேட்டை ஹரிபிரியா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

அன்று மாலை 4 மணிக்கு, மாதவரம் (பகுதி), மதுரவாயல் (பகுதி)க்கு உட்பட்ட சோழவரம், வில்லிவாக்கம், புழல், செங்குன்றம் பேரூர் பகுதி பாக முகவர்களுக்கு, சோழவரம் ஜிஎன்டி ரோடு லக்ஷ்மி மகாலில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.30ம் தேதி காலை 9 மணிக்கு ஆவடி நகரம், திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூர் பகுதி பாக முகவர்களுக்கு, பட்டாபிராம் ஜெய்கிறிஸ்டி திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு, பூண்டி மேற்கு, திருவள்ளூர் நகரம், திருவாலங்காடு கிழக்கு, மேற்கு, கடம்பத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய பாக முகவர்களுக்கு, திருப்பாச்சூர் ஏ.கே.என்.திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.இதில், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், க.பார்த்தசாரதி, காயத்ரிதரன், மு.ராஜேந்திரன், ம.இராஜி, ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், சிவசங்கரி உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.எனவே, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வார்டு பிரதிநிதிகள், பாக முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

Related Stories: