மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, செப். 21: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மீஞ்சூர் வட்டார கிளை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கதிரவன் தலைமை வகித்தார்.இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்  ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீஞ்சூர் வட்டாரத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் செய்து வரும் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து கோஷமிட்டனர்.

Related Stories: