திருத்தணி மலைப்பாதையில் உருண்டோடிய காரால் பரபரப்பு

சென்னை: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வசிப்பவர் விஜயகுமார் (35). அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை உறவினர்களுடன் திருத்தணி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்துள்ளார். பிற்பகல்  3 மணியளவில் அங்கு உள்ள மலைக்கோயில் வாகன நிறுத்தும் இடத்தில் காரை  நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் கோயிலுக்குள்  சென்று விட்டார். காரின் ஹேண்ட பிரேக் போடமல் அவசரத்தில் மேடான இடத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.  சிறிது நேரத்தில் திடீர் என கார்  அருகில் இருந்த 30 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். கோயிலில் இருந்து திரும்பி வந்த விஜயகுமார், கார் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் கார் பள்ளத்தில் உருண்டு கிடப்பதை பார்த்தார். அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Related Stories: